விநாயகர் வணக்கம்
ஒருகோட்டன் இருசெவியன் மும்மதத்தன்
நால்வாய்ஐங் கரத்தன்ஆறு
தருகோட்டம் பிறையிதழித் தாழ்சடையான்
தருமொருவா ரணத்தின் தாள்கள்
உருகோட்டன் பொடும்வணங்கி ஒவாதே
இரவுபகல் உணர்வோர் சிந்தைத்
திருகோட்டும் அயன்திருமால் செல்வமுமொன்
றோவென்னச் செய்யும் தேவே.
பதம் பிரிக்கப்பட்டது:
ஒரு கோட்டன் இரு செவியன் மும்மதத்தன் நால்வாய் ஐந்து கரத்தன் ஆறுதருகோட்டம் பிறை இதழி தாழ் சடையான் தரும் ஒரு வாரணத்தின்
தாள்கள்
உரு(கி) ஒட்டும் அன்போடு வணங்கி ஒவ்வாதே இரவுபகல் உணர்வோர் சிந்தைத் [திருகு-]
[-திரு]கோட்டும் அயன் திருமால் செல்வமும் ஒன்றோ என செய்யும் தேவே
பொழிப்பு:
ஒரு கொம்பினை உடையவன், இரு காதுகளை உடையவன், தொங்கும் (நாலம்) வாயினை உடையவன், ஐந்து கைகளை உடையவன்,ஆறு (கங்கை), வளைந்த (தருகோட்டம்) நிலவு (பிறை), கொன்றை மாலை (இதழி) சூடிகொண்டிருக்கும் , நீண்ட (தாழ்) சடையுடையவன் நமக்கு தந்தருளிய ஒருவன்,
ஒரு யானைமுகத்தினை உடையவரின் (வாரணம்) பாதங்களை ....
பேரன்போடு வணங்கி இரவு பகல் பாராது உணர்வோர் சிந்தைத் தரும் குற்றத்தை (திருகு) நீக்கும் (ஓட்டும்). பிரம்மனும் , திருமாலும் கொடுக்கும் செல்வம் எல்லாம் ஒரு பொருளா என உணர்த்தும்.
No comments:
Post a Comment